பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சேர்ப்பு
இந்தநிலையில், 5,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
மேலும், பொலிஸ் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
