Home இலங்கை சமூகம் விமான எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !

விமான எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !

0

சிறிலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிராங்பேர்ட் (FRA), இன்சியான் (ICN), மெல்போர்ன் (MEL) மற்றும் சிட்னி (SYD) விமான நிலையங்களில் ஜெட் எரிபொருள் விநியோகத்திற்கான தற்போதைய ஒப்பந்தங்கள் (31.10.2024) அன்று காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இரண்டு வருட காலத்திற்கு மேற்படி விமான நிலையங்களின் பொருத்தமான ஒப்பந்ததாரர்களை தேர்ந்தெடுப்பதற்கு வரையறுக்கப்பட்ட சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

விமான எரிபொருள்

இதற்காக எட்டு விமான எரிபொருள் விநியோக நிறுவனங்கள் விலை மனுவைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி, அமைச்சர்கள் குழுவால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version