Home சினிமா இதுவரை அப்பாவை பற்றி வெளியே அதிகம் பேசாதது ஏன்?- முதன்முறையாக கூறிய ஏ.ஆர்.ரகுமான்

இதுவரை அப்பாவை பற்றி வெளியே அதிகம் பேசாதது ஏன்?- முதன்முறையாக கூறிய ஏ.ஆர்.ரகுமான்

0

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வெற்றிப்பெற்று வருகிறார்.

இவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் படத்திற்காக தேசிய விருது எல்லாம் பெற்றார், அதனை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

தற்போது தக் லைஃப், ஜெனி, காதலிக்க நேரமில்லை, சாவா, லாகூர் 1947, சூர்யா 45, தேரே இஷ்க் மே உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

பிரபலத்தின் பேட்டி

இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரகுமானிடம் அப்பாவை பற்றி இதுவரை பேசாதது ஏன் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், அப்பாவின் மரணம் சகிக்கவே முடியாது ஒரு இருள்போல் இருந்தது.

ஆகவேதான் அவரைப் பற்றி அதிகம் பேசியதில்லை, அப்பா இறுதிக்காலத்தில் நிறைய சிரமங்களை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்.

தனது தந்தையிடம் இருந்துதான் கருணை, தாராள மனப்பான்மை, ஊக்கம் தரும்படியான உத்வேகம் ஆகியவற்றை கற்றதாக தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version