Home முக்கியச் செய்திகள் அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது

அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது

0

கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு(gotapaya rajapaksa) எதிராக காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட அரகலிய மாணவர் எழுச்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அரகலய செயற்பாட்டாளர்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பதாகக் கூறி, அவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிடும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சர் சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவார் என்று வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

மற்ற குற்றவியல் வழக்குகளைப் போலவே அரகலய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விரைவுபடுத்துவதில் சட்டமா அதிபர் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சில வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிக்கல் 

“இந்த விஷயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சட்டமா அதிபருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நீதி அமைச்சர் வெளியிடுவார்.

சில வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பது உண்மைதான். ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக பரிசீலித்த பிறகு சட்டமா அதிபர் ஒரு நியாயமான தீர்வை வழங்க தலையிடுவார், ஆனால் ஒட்டுமொத்தமாக அல்ல,” என்று அவர் கூறினார். 

NO COMMENTS

Exit mobile version