Home இந்தியா மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: ஆம்ஸ்ட்ரோங்கின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: ஆம்ஸ்ட்ரோங்கின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

0

இந்தியாவின் (India) பகுஜன் சமாஜ் கட்சியின் (Bahujan Samaj Party) தலைவர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்பாட்டமானது இன்று (06) ராஜீவ் காந்தி அரசு வைத்தியசாலைக்கு (Rajiv Gandhi Government Hospital) முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞா் ஆம்ஸ்ட்ரோங் (K. Armstrong) சென்னை (Chennai) பெரம்பூரில் (Perambur) உள்ள அவரது வீட்டின் அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பிரேத பரிசோதனை

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ரோங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதுடன் அவரின் ஆதரவாளர்கள் ராஜீவ் காந்தி அரசு வைத்தியசாலைக்கு வெளியே ஒன்றுகூடி குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தமிழக அரசு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்த கொலை சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டுமெனவும் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version