இராணுவத்தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி தொடக்கம் ராணுவத் தளபதியாக கடமையாற்றுகின்றார்.
பதவி நீடிப்பு
இலங்கையின் 28ஆவது இராணுவத் தளபதியான அவர் தனது 55 வயது பூர்த்தியடைவதன் காரணமாக ஜுலை 31ஆம் திகதியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில் ஓகஸ்ட் 1ஆம் திகதி தொடக்கம் மேலும் ஒரு வருடத்துக்கு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
