Home இலங்கை குற்றம் யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

0

யாழ். உடுவில் பகுதியில்  ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு(21/12/2025) இடம்பெற்றுள்ளது. 

மேலதிக விசாரணை

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் நேற்றிரவு ஐஸ்
போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது,  அவரிடமிருந்து 5 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம்
பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version