Home இலங்கை சமூகம் இலங்கைக்கு பயணத் தடை விதிக்கவில்லை: ஜூலி சங் விளக்கம்

இலங்கைக்கு பயணத் தடை விதிக்கவில்லை: ஜூலி சங் விளக்கம்

0

இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.

இதன்போது, அறுகம்குடா(Arugam Bay) பகுதிக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அறுகம்குடா(Arugam Bay) பகுதியில் குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காணப்படுவதாக தகவல் கிடைத்த சந்தர்ப்பத்தில், அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்தோம். அதற்கு அவர்கள் விரைவாக பதிலளித்தனர்.

தொடர்ச்சியாக அன்றாடம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தலைமையகத்துடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.

எவ்வாறெனினும், இலங்கைக்கான பயண ஆலோசனை தொடர்பான சில பிழையான தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கு உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version