இந்த நாட்டு முஸ்லிம்களை
கருவறுப்பதற்கான ஒரு தளமாக அருகம் குடாவை இஸ்ரேலியர்கள் பாவிக்கின்றனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை
காரியாலயத்தில் நேற்று(17.09.2025) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தளங்கள் இஸ்ரேலியர்களால்
கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. விடுதிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. சில முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாசாரத்தை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான
துர்ப்பாக்கிய நிலைமைகள் அருகம் குடாவில் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
வெறுமனே ஒரு சுற்றுலா தேவைக்காக
யூதர்கள் அருகம் குடாவுக்கு படையெடுக்கவில்லை. இந்த நாட்டு முஸ்லிம்களை
கருவறுப்பதற்கு ஒரு தளமாக அதனை பாவிக்கப் போகிறார்கள்
என்பதுதான் இதில் உள்ள மர்மம்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் பேசுகையில்,
