Home இலங்கை சமூகம் அறுகம்பையை தொடர்ந்து மட்டக்களப்பு நீதிமன்றம் ! பின்னணி என்ன

அறுகம்பையை தொடர்ந்து மட்டக்களப்பு நீதிமன்றம் ! பின்னணி என்ன

0

மட்டக்களப்பு (Batticaloa) நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக அடையாளம் தெரியாத தொலைபேசி இலக்கமொன்றினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து குறித்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 இல் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சில சூத்திரதாரிகளின் வழக்குகள் மட்டக்களப்பு நீதிமன்றத்திலேயே இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு, இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய ஆவணங்களும் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல் எச்சரிக்கை பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அறுகம்பையில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இவ்வாறான தாக்குதல் எச்சரிக்கையினால் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, குறித்த தாக்குதல் எச்சரிக்கையின் பின்புலம், சுற்றுலாத்துறையின் பாதுகாப்பு, தமிழர் பிரேத சூழல் மற்றும் தொடரும் அச்சுறுத்தல்களின் காரணம் என்பவை தொடர்பில் விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு,

https://www.youtube.com/embed/Hk_zPhkfA3s

NO COMMENTS

Exit mobile version