Home சினிமா சோட்டா பீம்-க்கு அடுத்து நம்ம பாக்யா தான்! – சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

சோட்டா பீம்-க்கு அடுத்து நம்ம பாக்யா தான்! – சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

0

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 1200 எபிசோடுகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பாக்யா நடத்தி வரும் ஹோட்டலை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என அவரது முன்னாள் கணவர் வில்லன் கோபி திட்டம்போட்டு செய்த விஷயத்தால் தற்போது ஹோட்டலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துவிட்டனர்.

அதில் இருந்து மீண்டு வந்து ஹோட்டலை எப்படி திறக்கலாம் என பாக்யா போராடிக்கொண்டிருப்பது போல தான் காட்சிகள் சென்றுகொண்டிருக்கிறது.

அரைத்த மாவையே அரைக்கும் கதை

பாக்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருவதாகவும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை மட்டுமே காட்டி சீரியல் இயக்குனர் அரைத்த மாவையே ஆராய்கிறார் என நெட்டிசன்கள் விமரிசித்து வருகின்றனர்.

டோலக்பூரில் இருக்கும் சோட்டா பீம்க்கு அடுத்து பாக்யாவுக்கு தான் இப்படி பிரச்சனை வருகிறது என நெட்டிசன் ஒருவர் கலாய்த்து இருக்கிறார்.

“கடைக்கு வச்ச சீல இந்த சீரியலுக்கு வச்சு இருக்கலாம்” என இன்னொரு ரசிகர் கடும் கோபமாக கமெண்ட் செய்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version