Home இலங்கை குற்றம் இறுதிச் சடங்கொன்றின் போது உயிரிழந்த இரு சகோதரர்கள்

இறுதிச் சடங்கொன்றின் போது உயிரிழந்த இரு சகோதரர்கள்

0

பத்தேகம பகுதியில் இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று(27) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பத்தேகம – மத்தேவில பகுதியில் இறுதிச்சடங்கொன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

இதன்போது, படுகாயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த மோதலின் போது மேலும் இருவர் படுகாயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/baddegama-attack-1740709153

NO COMMENTS

Exit mobile version