Home இலங்கை சமூகம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

பண்டாரநாயக்க(Bandaranaike International Airport) சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற முகப்புத்தக பக்கம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறித்த முகப்புத்தக பக்கம், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும் மேலும் பல தவறான தகவல்களையும் பரப்பி வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொதுமக்களுக்கான எச்சரிக்கை

அத்துடன், அந்த முகப்புத்தக பக்கத்திலுள்ள ஒரு இடுகையில்(Post) பல்வேறு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் நிரப்பப்பட்ட ஒரு பயணப்பொதி 639 ரூபாவுக்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி எந்த ஒரு பயணப் பொதியும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும், இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version