Home உலகம் பங்களாதேஷ் முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டுக்கள் இரத்து…! இடைக்கால அரசு அதிரடி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டுக்கள் இரத்து…! இடைக்கால அரசு அதிரடி

0

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக கடவுச்சீட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு நிர்வாகம் இரத்துச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அமைச்சரவையில் இருந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரின் கடவுச்சீட்டுக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவர்கள் நடத்திய போராட்டம்

பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இதில் 400 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கு முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், ஹசீனாவின் அனைத்து தூதரக கடவுச்சீட்டுக்களையும், அந்நாட்டு இடைக்கால அரசு இரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version