Home ஏனையவை ஆன்மீகம் மட்டக்களப்பு – பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

மட்டக்களப்பு – பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

0

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு (Batticaloa) – பெரியகல்லாறு அருள்மிகு
ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு திருக்கதவு திறத்தலுடன்
நேற்று  மாலை ஆரம்பமாகியுள்ளது. 

இதன்போது, பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்திலிருந்து அன்னையின்
அடையாளங்கள் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர்வலமாக வடபத்திரகாளியம்மன்
ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

மேலும், தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களுடன் தமிழ் மந்திரங்களுடன் இந்த
திருச்சடங்கு நடாத்தப்பட்டு வருகின்றது.

இடம்பெறவுள்ள நிகழ்வுகள் 

அம்மன் அடையாளங்கள் ஆலயத்தினை வந்தடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆலய
திருக்கதவு திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த திருச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, ஐந்து தினங்கள் நடைபெறும் ஆலய திருச்சடங்கில் நாளை (06) மாலை ஊர்காவல்
திருஉலாவும் நாளை மறுதினம் காலை சக்தி மகா யாகமும் மாலை
நோற்பு கட்டுதல் இடம்பெற்று கடல்குளிப்பும் நடைபெறவுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை காலை அன்னையின் தீமிதிப்பு உற்சவம் நடைபெறவுள்ளதுடன் அதனை தொடர்ந்து
ஆயுத பூஜையும் இடம்பெறவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version