Home இலங்கை குற்றம் கொலைக்களமாக மாறும் தென்னிலங்கை – சர்வதேச ஊடகம் அதிர்ச்சித் தகவல்

கொலைக்களமாக மாறும் தென்னிலங்கை – சர்வதேச ஊடகம் அதிர்ச்சித் தகவல்

0

இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்கள் கொலைக்களமாக மாறி வருவதாக பிபிசி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை காலப்பகுதியில் பல கொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 349 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 238 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கொலைகளும் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலும், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்திலும் அடிக்கடி நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு

சமீபத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை மற்றும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுகளில் நிலைமை மோசமாக இருப்பதாக பிபிசி அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version