Home இலங்கை சமூகம் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்: கிளிநொச்சியில் பரபரப்பு!

திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்: கிளிநொச்சியில் பரபரப்பு!

0

கிளிநொச்சியில் (Kilinochchi) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது, இன்று (16) இடம்பெற்றுள்ளது. 

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் தீ பற்றியுள்ளது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து, எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இது போன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்காக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/bike-caught-fire-at-kilinochchi-petrol-station-1718553560

NO COMMENTS

Exit mobile version