Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

0

கிளிநொச்சி (Kilinochchi) – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள
காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்றையதினம் (4) தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தப்பியோட்டம்

இதன்போது, கசிப்பு உற்பத்தி செய்வதற்காக தயார்
நிலையில் வைக்கப்பட்டிருந்த 2970 போத்தல் கோடாவினை பொலிஸார் பறிமுதல்
செய்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அந்தப்பகுதியில் இருந்து
தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தப்பிச்சென்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/blockade-of-illegal-leaching-plant-in-kilinochchi-1743780590

NO COMMENTS

Exit mobile version