Home இலங்கை சமூகம் அவசர தேவை நிமித்தம் இன்று முழுமையாக மூடப்படும் வீதி!

அவசர தேவை நிமித்தம் இன்று முழுமையாக மூடப்படும் வீதி!

0

புளூமெண்டல் தொடருந்து கடவை வீதியானது இன்று முழுமையாக மூடப்படும் என்று தொடருந்து துறை தெரிவித்துள்ளது.

அவசர பழுதுபார்ப்பு பணிகளுக்காக இவ்வாறு குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர பழுதுபார்ப்பு பணிகள்

தொடருந்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் தொடருந்து பாதையில் உள்ள ப்ளூமெண்டல் தொடருந்து கடவையில் அவசர பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version