Home உலகம் பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

0

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

ஆபத்தான முறையில்

அதன் படி, இந்த நான்கு மாதங்களில் மாத்திரம் பிரித்தானியாவிற்குள் ஆபத்தான முறையில் படகுகளின் மூலம் 7,167 க்கும் மேற்பட்டவர்கள் இங்கிலீஷ் கால்வாயை கடந்து குடியேறியுள்ளனர்.

அத்தோடு, கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு படகு மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ருவாண்டா திட்டம்

அதேவேளை, பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் குடியேறுபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரிசி சுனக் தெரிவித்திருந்தார்.

அதன்போது, பிரதமர் ரிசி சுனக், குடியேற விரும்புபவர்கள் அதிகமாக சட்டவிரோதமாகவே பிரித்தானியவிற்கு நுழைய விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது அறிந்திருப்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாகவிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Source: https://ibctamil.com/article/boat-migrants-into-britain-in-2024-1714336976

NO COMMENTS

Exit mobile version