யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் கடற்றொழில் படகொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகானது இன்றையதினம்(09) இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
ஆட்களற்ற நிலையில் , படகினுள் கடற்றொழில் வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில்
, சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து,
படகு தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
