திருகோணமலை குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட திரியாய் 05ம் வட்டாரத்தில்
ஆணொருவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று (08) மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாருடையது என்பது இன்னும் இனம் காணப்படவில்லை எனவும் சடலம் இனம்
காண முடியாத நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணை
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
