Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

0

யாழ்ப்பாணத்தில்(jaffna) இன்றையதினம்(24) இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த
சோதிலிங்கம் மிதுர்சன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியவேளை அவரது சடலம்
கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணை

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 இதேவேளை வவுனியா (Vavuniya) விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (23) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version