Home இலங்கை சமூகம் திருகோணமலை கடற்கரையில் 40 வயதுடைய ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை கடற்கரையில் 40 வயதுடைய ஒருவரின் சடலம் மீட்பு!

0

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடற்கரை பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா – ஆலாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரின் சடலமே இன்று (08.11.2025) இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள
உப்பாறு பாலத்துக்கு கீழ், இருவர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும்
உபகரணங்களுடன் இருப்பதை அறிந்து, கடற்படையினர் நேற்றிரவு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ​

கடற்படையினர் அருகில் சென்றவேளை, அந்த இருவரும் உபகரணங்களை அங்கேயே
விட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை

இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை, ஒருவர் காணாமல் போனதாக ஒருவரால் கிண்ணியா பொலிஸில்
முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் உப்பாறு பாலத்துக்கு அருகில் 40 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, ​இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version