Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து சடலம் மீட்பு

முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து சடலம் மீட்பு

0

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றையதினம்(17) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்த நிலையில் இனங்காணப்பட்டு சம்பவம்
தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

மேலதிக விசாரணைகள்

இதனையடுத்து, குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

செல்வபுரம் பகுதியினை சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version