நிவிதிகல, தம்மோருவ சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர், கொழம்பகம, நிவிதிகலவைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரணம்
மூன்று பேருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
