Home இலங்கை சமூகம் தொழிற்சாலையொன்றில் அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்: ஒருவர் பலி – மூன்று பேர் வைத்தியசாலையில்…

தொழிற்சாலையொன்றில் அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்: ஒருவர் பலி – மூன்று பேர் வைத்தியசாலையில்…

0

யட்டியாந்தோட்டை, கிரிபோருவ தோட்டத்தில் அமைந்துள்ள றப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (02) காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் கிரிபோருவ தோட்டத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

றப்பர் தயாரிப்பிற்காக ரசாயனங்களை கலக்கும் கொதிகலன் எதிர்பாராத விதமாக வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version