Home இலங்கை குற்றம் கொழும்பில் காதலிகளை குஷிப்படுத்துவதற்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞன்

கொழும்பில் காதலிகளை குஷிப்படுத்துவதற்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞன்

0

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, ​​உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட 61 இரத்தினக் கற்கள் அவரது வசம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி தனது காதலியான 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மற்றும் டிக்டோக் மூலம் அவர் அடையாளம் கண்ட இரண்டு காதலிகளுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version