இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதை பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கி விட்டன.
இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் மேற்கொண்ட முயற்சியே இதற்கு காரணம்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் சிறந்த முடிவுகளை எடுக்கும் என தமிழ் மக்கள் எதிர்பாத்திருந்தனர்.
எனினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள், பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
இது குறித்த ஒரு தெளிவு சர்வதேச அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருப்பதாலேயே இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுகள் உருவாகின்றன.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
Source: https://tamilwin.com/article/britain-and-canada-stances-against-sri-lanka-1748095808
