Home இலங்கை குற்றம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு

0

போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பௌத்த பிக்கு ஒருவர்
மாத்தளை அளவ்வ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தடுப்புக்காவல் 

கைது செய்யப்பட்ட 38 வயதான பௌத்த பிக்கு, குறித்த பிரதேச விகாரை ஒன்றை சேர்ந்தவர்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், மினுவாங்கொட நேவி தினேஸின் குழுவை சேர்ந்தவர்கள் என்று
தெரியவந்துள்ளது.

குறித்த மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 7 நாட்கள் தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version