Home இலங்கை பொருளாதாரம் ஏழு தசாப்தங்களாக பாதீட்டில் விடுபட்ட தவறுகள்: பேராசிரியர் விளக்கம்

ஏழு தசாப்தங்களாக பாதீட்டில் விடுபட்ட தவறுகள்: பேராசிரியர் விளக்கம்

0

இலங்கையில் கடந்த ஏழு தசாப்தங்களாக பாதீட்டின் யோசனைகள் 30-40 வீதமே செயற்படுத்தப்பட்டுள்ளன என்று பேராசிரியர் நலின் அபேசேக்கர (திறந்த பல்கலைக்கழகம் நாவலை) தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு பாதீடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு ஏதும் நிவாரணம் வழங்கப்படாமல் ஒரு இலக்கங்களின் பட்டியல் போல் ஆகாமல், அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கண்காணிப்பு திட்டம்

இந்தியா நிகழ்தர பட்ஜெட் கண்காணிப்பு மற்றும் செலவின கண்காணிப்பு பொது நிதி மேலாண்மை அமைப்பை (PFMS) (real-time budget monitoring and expenditure tracking) பயன்படுத்துகிறது.

இதன் மூலம் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றவா என்பன கண்காணிக்கப்படுகின்றன.

கடந்த வரவு செலவுத் திட்டங்களில் பல யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படாமை கவலைக்குரிய விடயங்களாகவுள்ளன.

அதனால் இந்தியாவை போன்ற (real-time budget monitoring system) ஒன்றை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை முன்வைக்கிறேன்.

வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் இலங்கையில் பாரிய பிரச்சினை நிலவுகிறது.

அதனால் நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தி தேசத்திற்கு பட்ஜெட் கண்காணிப்பு முறைமை ஒரு சாதகமாக அமையும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version