Home முக்கியச் செய்திகள் கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி

0

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (26.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் சாரதி பேருந்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/bus-accident-in-kollupitiya-1735206663?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version