Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

அநுராதபுரம் (Anuradhapuram) பாதெனிய பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிசுசரிய பேருந்தும் மற்றும்  ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சிசுசரிய பேருந்து மாணவர்களை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்ட போது ​​பின்னால் வந்த பேருந்து சிசுசரிய பேருந்தின் பின்புறம் மோதியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

இந்த விபத்தில் நான்கு மாணவர்கள், பேருந்தின் சாரதி மற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த 14 பெண்கள் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்துடன் தொடர்புடைய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version