Home இலங்கை சமூகம் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த பேருந்து : ஒருவர் பலி

அதிகாலையில் தீ பிடித்து எரிந்த பேருந்து : ஒருவர் பலி

0

அனுராதபுரத்தில் (Anuradhapura) பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (22.02.2025) அதிகாலை உடமலுவ காவல்துறை பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பலாங்கொடையிலிருந்து (Balangoda) அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்ரே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது அந்த பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடைய எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

அநுராதபுரம் நகர சபையின் தீயணைப்பு பிரிவு, அநுராதபுரம் காவல்துறையினர் மற்றும் உடமலுவ காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். 

தீப்பிடித்த பேருந்து முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன், உடமலுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version