Home இலங்கை அரசியல் உரும்பிராயில் அரியநேந்திரனுக்கு ஆதரவான பரப்புரை முன்னெடுப்பு

உரும்பிராயில் அரியநேந்திரனுக்கு ஆதரவான பரப்புரை முன்னெடுப்பு

0

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில்
போட்டியிடுகின்ற தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு ஆதரவான
பரப்புரை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பரப்புரை இன்று (31.08.2024) காலை 10:00 மணியளவில் உரும்பிராயில் பொன் சிவகுமாரின் நினைவுச்சிலை முன்னிலையில் சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த
பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

பல அணிகளாக பரப்புரை

இந்நிலையில், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தலமையில் பல அணிகளாக பரப்புரை
இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/campaign-for-ariyanethran-in-jaffna-1725104445

NO COMMENTS

Exit mobile version