Home இலங்கை அரசியல் யாழில் ரணிலுக்கு ஆதரவு கோரி முன்னாள் பெண் இராஜாங்க அமைச்சர் பிரசார நடவடிக்கை

யாழில் ரணிலுக்கு ஆதரவு கோரி முன்னாள் பெண் இராஜாங்க அமைச்சர் பிரசார நடவடிக்கை

0

யாழ்ப்பாணம் (Jaffna) – திருநெல்வேலியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremeshinghe) ஆதரவு தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனால் தேர்தல் பிரசார
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த தேர்தல் பிரசாரம், இன்று (07.09.2024) காலை திருநெல்வேலி சந்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

துண்டு பிரசுரங்கள் 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சி
ஆதரவாளர்கள் ஆகியோர் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் நாடு பொருளாதார நெருக்கடியில்
இருந்த போது அதனை மீட்டெடுத்துள்ளார். 

மேலும், “விக்ரமசிங்க மிகப்பெரும் அரசியல்வாதி மிகவும் வலிமை வாய்ந்தவர். சர்வதேச
நாடுகளிலே செல்வாக்கு மிக்கவர். அவர் இந்த நாட்டை நல்ல நிலைமையில் கொண்டு
செல்வார்.

எனவே, அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். தமிழீழ விடுதலை புலிகளின் காலத்திலும் கூட அவர்
நாட்டுக்கு பல்வேறு சேவைகளை செய்தவர். எனவே, அவரை ஆதரிக்க வேண்டும்”என தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

Source: https://tamilwin.com/article/campaign-meeting-in-jaffna-by-vijayakala-for-ranil-1725695833

NO COMMENTS

Exit mobile version