Home இலங்கை சமூகம் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சூறாவளி பிரசாரம்

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சூறாவளி பிரசாரம்

0

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிடும் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் செவ்வாய்க்கிழமை(17.09.2024) துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், பேருந்து நிலையம், பொதுச்சந்தைத் தொகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் இத்துண்டுபிரசுர பிரசாரப்பணி முன்னெடுக்கப்பட்டது.

பலரும் இணைந்து பிரசார நடவடிக்கை 

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் கிழக்கு மாகண சபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.நகுலேஸ், மற்றும் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version