Home உலகம் குண்டுத்தாக்குதல் : இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

குண்டுத்தாக்குதல் : இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

0

காசாவில் மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த டிரக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா, இஸ்ரேலிடம் தகவல் கேட்டுள்ளது

கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஹ்மத் ஹுசென், தனது அலுவலகம் காசாவில் தனது தண்ணீர் டிரக் குண்டுவீசித் தாக்கப்பட்டதாகக் கூறியதை அடுத்து, “மேலும் தகவலுக்காக” இஸ்ரேலை அணுகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம்

“பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் விரைவாகவும் தடையின்றியும் நிறைவேற்றப்படுவது மிகவும் முக்கியமானது” என்று ஹசன் சமூக ஊடகத்தில் ஒரு பதிவில் கூறினார்.

அமெரிக்காவின் தலையீடு : தணியுமா ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்…!

தண்ணீர் டிரக் மீது குண்டுத்தாக்குதல்

டொராண்டோவை தளமாகக் கொண்ட உதவி அமைப்பான சர்வதேச வளர்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை (IDRF), காசாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக “சுத்தமான குடிநீரை” வழங்க உதவியதன் பின்னர் அதன் தண்ணீர் டிரக் மீது குண்டுவீசப்பட்டதாக வெள்ளிக்கிழமை கூறியது.

அது இஸ்ரேலின் தாக்குதல் அல்ல: அடுத்த கட்டத்திற்கு நகரும் போர்

இந்த தாக்குதலால் தனது குழுவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஐ.டி.ஆர்.எஃப் கூறியது, ஆனால் இந்த தாக்குதல் “காசாவில் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதை கடினமாக்கியது” ஏனெனில் அவர்கள் “மாற்று டிரக்குகளை நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version