Home இலங்கை சமூகம் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வாய்க்கால் புனரமைப்பு பணி

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வாய்க்கால் புனரமைப்பு பணி

0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பிரமந்தனாறு குளத்தின்
கீழான வாய்க்கால் புனரமைப்பு பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன் ரூபா
செலவில் குறித்த புணரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற
உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த
புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அரச உத்தியோகத்தர்கள்

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்
எஸ். முரளிதரன், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து
கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version