Home இலங்கை சமூகம் வடக்கு ஆளுநரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு

வடக்கு ஆளுநரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு

0

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் (EODS) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (09.09.2024) நடைபெற்றுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு 

இந்த கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஆளுநர், மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/charles-election-monitoring-committee-meeting-1725892078

NO COMMENTS

Exit mobile version