அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப்பின் நண்பரான சார்லி கிர்க்கைக் கொலை
செய்தவர் சட்டத்தின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு அவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை சுற்றி
சுற்றப்பட்டிருந்த துண்டில் இருந்த மரபணு, காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த
சந்தேக நபருடன் பொருந்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க எப்பிஐ(FBI) பணிப்பாளர் இதனை உறுதிச்செய்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம்
இதனைடுத்து, துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட டைலர் ரொபின்சனுக்கு எதிராக இந்த
வாரத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
