செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் 14ஆவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்றையதினம்(09) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 63 மனித எலும்புக்கூடுகளில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள்
யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
