Home இலங்கை சமூகம் செம்மணியில் குவியல் குவியலாக மீட்கப்படும் என்பு கூடுகள்

செம்மணியில் குவியல் குவியலாக மீட்கப்படும் என்பு கூடுகள்

0

செம்மணி மனித புதைகுழியில் குவியலாக 08 என்புக்கூட்டு இன்றைய தினம் அடையாளம்
காணப்பட்டுள்ளது.

அத்துடன் புதைகுழியினுள் பிறிதொரு பகுதியில் இரண்டு
என்புகூடுகள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரு என்பு கூட்டு தொகுதி

அதேவேளை புதைகுழியின் மற்றுமொரு இடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரண்டு
என்புக்கூட்டுகளுக்கு மேலாக ஒரு என்புக்கூடும் , ஒரு என்புக்கூட்டின்
தோள்பட்டை பகுதியுடன் தொடுகையுற்றவாறு மற்றுமொரு என்புக்கூடுமும் அடையாளம்
காணப்பட்ட நிலையில் அவை இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2ஆம் திகதி ஒரு என்புக்கூட்டு தொகுதியின் தோள்ப்பட்டையுடன் தொடுகையுற்ற
நிலையில் மற்றுமொரு என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் ,
29ஆம் திகதி ஒரு என்பு கூட்டு தொகுதியின் மார்பு பகுதியில் ஒப்பீட்டளவில்
சிறிய என்பு கூடொன்றின் மண்டையோட்டு பகுதி காணப்பட்டவாறு இரு என்பு
என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளை மறுதினம் சனிக்கிழமையுடன் இரண்டாம் கட்ட அகழ்வு
பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நிறைவுறுகின்றன.

அதேவேளை அகழ்வு பணிகளுக்காக மேலும் 08 வார கால பகுதி தேவை என மன்றில்
விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையில் , அதற்கான பாதீடுகளை தயாரிக்குமாறு மன்று
உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version