செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித
எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
42 மனித எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம்
கட்ட அகழ்வு பணிகள் 9ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி
ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை, தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா,
சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு
முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அழ்வுகளின் போது இதுவரை 42 மனித
எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
