சந்தையில் கோழி இறைச்சியின் விலை தற்போது அதிகரித்து செல்வதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விலை அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரிக்கும்.
அத்துடன் கோழித் தீவன பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரித்து வருவதாகவும் மாதலி ஜெயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
