Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பிரிவு

முல்லைத்தீவு காவல் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பிரிவு

0

முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் புதிதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு ஒன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று(02) புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் இடம்பெற்றள்ளது.

அந்தவகையில், வடமாகாண சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் திலக் சி.ஏ.தனபால கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் குறித்த தடுப்பு பிரிவினை திறந்து வைத்துள்ளார்.

நடன நிகழ்வு

இந்த நிகழ்வில் சிறார்களின் நடன நிகழ்வு இடம்பெற்றிருந்ததனை தொடர்ந்து கலந்து கொண்ட அதிதிகளால் மரநடுகையும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி (Kilinochchi), முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த டி சில்வா, 593 பிரிக்கேட் கொமாண்டர் பிரிகேடியர் அணில் சோமவீர, முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சந்திரசேன , உதவி காவல்துறை அத்தியட்சகர் லசந்த விதாரன , முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் நன்னடத்தை காவல் பொறுப்பதிகாரி குமாரி ஆரியரத்ன, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் பரணிதரன், மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் , புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் சிறுவர் உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு காவல்துறை ஆலோசனை குழு உறுப்பினர் த.நவநீதன், இணக்க சபை உபதலைவர் ஐ.மாதவராசா, புதுக்குடியிருப்பு இலங்கை வங்கி முகாமையாளர், சிவில் காவல் பாதுகாப்பு குழு, கிராம சேவகர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version