Home இலங்கை குற்றம் கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டவர் கைது: விசாரணையில் வெளியான தகவல்

கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டவர் கைது: விசாரணையில் வெளியான தகவல்

0

கொள்ளுப்பிட்டி, சமகி மாவத்தையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன பொருட்கள் விற்பனை செய்யப்படும் களஞ்சியசாலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சீன சிகரெட்டுகள் இன்று (18) கைப்பற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கலால் நிலையம் தெரிவித்துள்ளது.

சீன நாட்டவர் கைது

இதன்போது சிகரெட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த 59 வயதுடைய சீன நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், சிகரெட் தொகையும் மத்திய கலால் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version