Home இலங்கை சமூகம் யாழ் – பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்

யாழ் – பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று (04) காலை சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுகாதார தரப்பினர், காவல்துறையினர், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற
இந்த நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

அத்துடன் விழிப்புணர்வு
பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

கலந்து கொண்டோர் 

ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில்
செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண
சுகாதார அமைச்சின் செயலாளர் அருள்ராஜ், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன்
பத்திரண ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், இராணுவ காவல்துறை உயர் அதிகாரிகள்,
கடற்படையினர், சுகாதார உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள் என பலரும்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/clean-up-in-jaffna-pannai-surrounding-areas-1728033367

NO COMMENTS

Exit mobile version