Home இலங்கை சமூகம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்

ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்

0

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி தமிழ்த்தேசிய மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக
கொண்டாடப்படவுள்ளது.

மாவீரர் நாளை அனுஸ்ரிக்க தமிழர் தாயகம் தயாராகி வருகின்றது.

இதற்கான முன்னாயத்தப் பணிகள் தமிழர் தாயகம் எங்கும் ஆரம்பமாகியுள்ளது.

மாவீரர் நாள்

இதற்கமைய
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றையதினம் (01) சிரமதானப்
பணிகள் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினால்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினால் மாவீரர்களுக்கு சுடரேற்றி
அஞ்சலி செலுத்திய பின்னர் இடம்பெற்ற சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய
உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Source: https://ibctamil.com/article/cleanup-work-begins-at-aalankulam-shrine-1730506455

NO COMMENTS

Exit mobile version