Home இலங்கை சமூகம் களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கான எச்சரிக்கை நீக்கம்

களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கான எச்சரிக்கை நீக்கம்

0

களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் குறித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மழை நிலைமை

நாடு முழுவதும் பெய்யும் மழை நிலைமைகளால் முக்கிய ஆறுகளின் நீர் மட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தேவையானால் வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version